ஸ்டாலினும் முதல்வர்தான்! – தினமணி தலையங்கம்.

எப்போதோ நடந்தேறியிருக்க வேண்டிய ஒன்று காலதாமதமாக இப்போதாவது நடந்திருக்கிறதே என்கிற வகையில் மகிழ்ச்சி. மு.க. ஸ்டாலினுக்குப் பதவியும் அங்கீகாரமும் ஆரம்பம் முதலே தாமதமாகத்தான் கிடைத்து வருகிறது.

1989-ல் 13 ஆண்டு அரசியல் வனவாசத்திற்குப் பிறகு திமுக ஆட்சிக்கு வந்தபோது மு.க. ஸ்டாலின் அமைச்சராக்கப்பட்டிருந்தால் யாரும் குற்றம் கண்டிருக்க மாட்டார்கள். ஏனோ, முதல்வர் கருணாநிதி அவரை அமைச்சராக்கவில்லை.

இன்றைய அமைச்சரவையில், க. அன்பழகன் மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தவிர ஏனைய மூத்த அமைச்சர்களான ஆர்க்காடு வீராசாமி, வீரபாண்டி ஆறுமுகம், கோ.சி. மணி, பொன்முடி மற்றும் கே.என். நேரு ஆகியோர் முதன்முதலில் அமைச்சர்களானது அப்போதுதான்.

1996-ல் ஆட்சிக்கு வந்தபோது மு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்த்தால் மீண்டும் ஏமாற்றம். சென்னை நகர மேயராக்கப்பட்டார். அவர் நிர்வாக அனுபவம் பெற வேண்டும் என்று தந்தையும் முதல்வருமான கருணாநிதி எதிர்பார்த்ததில் நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை. அரசியலில் அனுபவமே இல்லாத பலரை அமைச்சர்களாக்குவதில் தயக்கம் காட்டாதவர் தனது மகனிடம் மட்டும் ஏன் தயக்கம் காட்டினார் என்பது புதிர்.

ஏனைய பல திமுக தலைவர்களைவிட, கட்சிப் பொறுப்பையோ ஆட்சிப் பொறுப்பையோ ஏற்கும் தகுதியும் அனுபவமும் மு.க. ஸ்டாலினுக்கு நிச்சயமாக உண்டு. அவரது அரசியல் வாழ்க்கை 70-களில் தொடங்கிவிட்டது. திமுக தலைவர் கருணாநிதியின் மகன் என்பதைவிட அடிமட்டத்திலிருந்து தன்னை உயர்த்திக் கொண்டவர் என்பதுதான் மு.க. ஸ்டாலினின் உண்மையான பலம்.கட்சிக்குப் பிரசார நாடகங்கள் போடுவது, கட்சியின் போராட்டங்களில் பங்கு பெறுவது, இளைஞர் அணியை வலுவான அமைப்பாக மாற்றி இன்றைய தலைவர்கள் பலரை உருவாக்கியது என்று கட்சிக்கு அவரது பங்களிப்பு கொஞ்சநஞ்சமல்ல.

அடிமட்டத் தொண்டராகத் தொடங்கிய அவரது அரசியல் வாழ்க்கை இளைஞரணி, சட்டப்பேரவை உறுப்பினர், சென்னை மாநகர மேயர், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர், அமைச்சர் என்று தொடர்ந்து இப்போது துணை முதல்வர் பதவியில் அவரை அமரச் செய்திருக்கிறது.கட்சியைப் பொருத்தவரை அவர் தன்னை ஒரு சக்தியாகத் தொண்டர்கள் மத்தியில் வளர்த்துக் கொண்டிருப்பது உண்மைதான் என்றாலும், இதுவரை அவரால் தனது தனித்தன்மையைக் காட்ட முடியாமல் இருப்பது ஏன் என்பதுதான் பலருக்கும் புரியாத புதிர்.

ஏனைய அமைச்சர்கள் எல்லோரும் பத்திரிகையாளர்களிடம் சகஜமாகப் பேசுவதும், பேட்டியளிப்பதுமாக இருக்கும்போது மு.க.ஸ்டாலின் மட்டும் ஒதுங்கியே இருப்பது ஏன் என்று ஆச்சரியப்படாதவர்கள் இல்லை.அதற்கு ஒரு முக்கியமான காரணம், அவர் கருணாநிதி என்கிற ஆலமரத்தின் நிழலில் இருப்பதுதான் என்று கருத வழியுண்டு. நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன், மதியழகன் போன்ற ஜாம்பவான்கள்கூட கருணாநிதி என்கிற சூரிய வெளிச்சத்தின் முன்னால் பிரகாசிக்க முடியாதபோது இயல்பாகவே கூச்ச சுபாவம் கொண்ட மு.க. ஸ்டாலினால் மட்டும் அது எப்படிச் சாத்தியம்?

மேலும், மு.க. ஸ்டாலினுக்குத் தந்தை கருணாநிதியிடம் இருக்கும் பயம் கலந்த மரியாதையால்கூட தன்னை முன்னிறுத்திக் கொள்ள விரும்பாமல் இருக்கலாம். தனிமனித நாகரிகத்தைக் கடைப்பிடிப்பதில் மற்றவர்களிடமிருந்து எப்போதுமே வேறுபடுபவர் அவர். சட்டப்பேரவையில் ஜெயலலிதா தாக்கப்பட்ட சம்பவத்தின்போது எம்.எல்.ஏ.வான அவர் கடைப்பிடித்த நிதானம் அதற்கு ஓர் உதாரணம். தலை இருக்கும்போது வால் ஆடக்கூடாது என்று மு.க. ஸ்டாலின் நினைப்பதுகூட காரணமாக இருக்கலாம்.

மேயராகவும் சரி, உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் சரி மு.க. ஸ்டாலினின் செயல்பாடுகளில் யாரும் பழுது காண முடியாது. தகுதியும் திறமையும் வாய்ந்த அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்து, தனது துறையின் செயல்பாடுகளில் குற்றம் காண முடியாதபடி நிர்வகிப்பதில் அவர் யாருக்கும் சளைத்தவரல்ல. அதேநேரத்தில், மிகப்பெரிய சாதனை என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அவருடைய நிர்வாகத் திறமை பளிச்சிடவும் இல்லை.

முதல்வர் கருணாநிதி மருத்துவமனையில் முதுகுத்தண்டு அறுவைச்சிகிச்சைக்குச் சென்றபோதே ஸ்டாலினிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்க வேண்டும் என்பதுதான் நமது கருத்து. இந்தத் தள்ளாத வயதில் வீல் சேரில் முதல்வர் அங்குமிங்கும் பயணிப்பதும், தன்னை வருத்திக்கொண்டு நாளும் கிழமையும் பத்திரிகைகளுக்குப் பேட்டியளிப்பதும் பிரச்னைகளை எதிர்கொள்வதும் பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. இந்தப் பொறுப்புகளைத் துணை முதல்வரான மு.க. ஸ்டாலின் இனிமேல் ஏற்றுச் செயல்படுவார் என்று நம்பலாம்.

இதுநாள் வரை முதல்வர் கருணாநிதியின் நிழலாக இருந்தவர் இனிமேல் தனது தனித்தன்மையைக் காட்ட வேண்டிய நேரம் கைகூடியிருக்கிறது. சுறுசுறுப்புடனும் அரசியல் சாதுர்யத்துடனும் தனது பொறுப்புகளை அவர் கையாளும் விதத்தில்தான் அவருடைய வருங்காலமும், திமுகவின் எதிர்காலமும் அடங்கியிருக்கிறது.  தமிழக சரித்திரத்தில் முதன்முறையாக ஒரு துணை முதல்வர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அந்தவகையில் மு.க. ஸ்டாலின் ஒரு முதல்வர்கூட. “தினமணி’யின் வாழ்த்துகள்.


நன்றி – தினமணி

ஊருக்கு எழைச்சவன் புள்ளையார் கோயில் ஆண்டியாம்!

வர வர இந்த தமிழ் உணர்வாலர்கலுக்கும் ( சரியான “லா” தான்..!!!) , தமிழகத்த முன்னேத்தப் போறதா சொல்லிக்கிடுறவுக அட்டகாசம் அதிகமாயிட்டு. என்னன்னு கேக்கீகளா?

அதுக்கு முன்னாடி இந்தப் பதிவ படிச்சிக்கிடுங்க.

டெல்லிக்கு ப்ளைட் ஏறிய நம்மூரு புகழ்

என்னமோ வாரிசு அரசியலுக்கும் , காங்கிரசு கட்சிக்கும் சம்பந்தமே இல்லையாம். அதுனால நாடாளுமன்றத்திலே பேபி சீட் இல்லையாம்.

சோனியா காந்தி என்ன தேசத்தோட தாயா ?

ராஜிவ் காந்தியோட சம்சாரம்….

ராஜிவ் காந்தி யாரு ?

இந்திராகாந்தியோட பையன்….

இந்திராகாந்தி யாரு ?

நேரு மாமாவோட பொண்ணு.

அவுகள விடுங்க , அட நம்ம ராகுல் காந்தி ? சோனியாவோட / ராஜிவோட பையன்.

இந்த நாலாம் பரம்பரையில இருக்குற ராகுல் காந்தி மந்திரி பதவி ஏத்துக்கிடணும்னு கெஞ்சுற ஒருத்தர் பேபி சீட்டர் இல்லைங்கறறாம். இத ஒரு கேலிச் சித்திரமாம். அதை வெச்சி நம்ம தமிழ் வெறிப் படை ஆராய்ச்சி பண்ணிகிட்டு இருக்காங்க.

இதெல்லாம் நம்ம தமிழ்நாட்டுல மட்டும் தான் நடக்குமய்யா………

சரத்பவார் பிரதமராக வாய்ப்பு இருக்குன்னா , ஆதரிப்போம்னு நேர் எதிரா இருக்குற கட்சி சிவசேனா அறிக்கை வுடுது. இங்க தமிழ்நாட்டுல மட்டும் தான் ஒருத்தரை ஒருத்தர் கால வாறி விடுற தமிழ் நண்டுகளாவே இருக்காங்க.

தமிலன் தன்னோட சுயநலத்துக்காக அதிகார வட்டத்த உருவாக்கி வெச்சுகிட்டு அது மூலமா ஏதாச்சும் லாபம் வருமான்னு பாக்குறதாலதான் இந்த வாரிசு அரசியலே.

சரி , இன்னிக்கு மதுரைல நான் நிக்கணும்னு அழகிரியா சொன்னாரு ? இல்லியே ஆதரவாளக் குஞ்சுகள் தானே அணியணியா படையெடுத்தாங்க அறிவாலயத்துக்கு?

மதுரையில் அழகிரி போட்டி?

உங்க சுயநலத்துக்காக அவுங்களை பயன்படுத்திகிட்டு அவுங்களையே குறை சொல்றது என்னய்யா நியாயம்?

தமிழ்நாட்டுக்கு அதிக அமைச்சர்கள் மூலமா  அதிகாரம் வாங்கித் தந்தாலும் குற்றம். இல்லேன்னாலும் குற்றம்…. என்னதான்யா செய்யச் சொல்றீங்க????????????

ஒண்ணு தெளிவா சொல்லிப்போடுங்க ,என்ன பண்ணுரதுன்னு…

இல்லாட்டி குட்டயக் கொழப்பாம சும்மா இருங்க.

டைம்ஸ் ஆப் இந்தியா காரன் சொல்லிட்டானாம். உடனே மானம் போச்சாம்….! ராகுல் காந்தி கண்டிப்பா மந்திரி பதவி ஏத்துக்கனும்னு பிரதமர் சொன்னப்போ இந்தியாவோட மானம் போகலியா ?

படுத்துக்கொண்டே ஜெயித்த கலைஞர்..- தட்ஸ்தமிழ் புகழாரம்!

சென்னை: 85 வயதாகும் முதல்வர் கருணாநிதிக்கு, இந்த லோக்சபா தேர்தல் முடிவுகளை மறக்கவே முடியாது. அனைத்து கணிப்புகளையும் பொய்யாக்கி, திமுக கூட்டணிக்கு எதிர்பாராத வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்து விட்டன அவரது அரசியல் சாதுர்யமும், அட்டகாச காய் நகர்த்தல்களும்.

நேற்று வரைக்கும் இப்படிப்பட்ட ஒரு முடிவு வரும் என கருணாநிதி நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்.

தனது உடல் நலிவையும் தாண்டி மிக அசாத்தியமான தன்னம்பிக்கையையும் தனது அரசின் சாதனைகளையும் மட்டுமே முன்நிறுத்தி தேர்தலை சந்தித்து வெற்றியை ஈட்டிக் காட்டியிருக்கிறார்.

ஈழத் தமிழர் பிரச்சனை தேர்தலில் திமுக கூட்டணிக்கு மிகப் பெரிய பாதகத்தை ஏற்படுத்தப் போகிறது என்ற ரீதியில் எழுந்த பேச்சுக்களும், எழுதப்பட்ட செய்திகளும், கணிக்கப்பட்ட கணிப்புகளும் பொய்யாகி திமுக கூட்டணி 28 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறி விட்டன. குறிப்பாக மிகப் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி பலத்த அடி வாங்கியுள்ளது.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த முதல்வர் கருணாநிதி, பிரசாரத்திற்குக் கூட போக முடியாத நிலை. திருச்சி பிரசாரக் கூட்டத்தில் மட்டுமே அவர் பங்கேற்றார். ஆனால், இதனால் ஏற்பட்ட முதுகுவலி-காய்ச்சலால் மருத்துவமனையில் படுத்திருந்தபடி தன்னைச் சுற்றி நடந்து வந்த அரசியல் நிகழ்வுகளை மெளனமாக கவனித்த்தபடி, தனது தளகர்த்தர்களுக்கு செயல் திட்டங்களை மட்டும் போட்டுத் தந்துவிட்டு அமைதி காத்தார்.

இன்றைய முடிவுகள் முதல்வர் கருணாநிதிக்கு நிச்சயம் பெரும் நிம்மதியைக் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

பெரியார் முதல் ஜி.கே.வாசன் வரை எத்தனையோ தலைவர்களுடன் பழகியுள்ள முதல்வர் கருணாநிதிக்கு இன்றைய வெற்றி கடந்த தேர்தலில் கிடைத்த 40க்கு 40 வெற்றியைவிட மிக இனிப்பானது.

இந்த வெற்றியின் மூலம் ஒரே கல்லில் பல மாங்காய்களை அடித்துள்ளார் கருணாநிதி.

முதல் மாங்காய் – பாமகவின் உதவி இருந்தால்தான் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை தூள் தூளாக தகர்த்து எறிந்தது.

2வது மாங்காய் – ஈழத் தமிழர் பிரச்சினையால் திமுகவுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்ற வாதத்தை பொய்யாக்கியது.

3வது மாங்காய் – அதிமுக வென்றால் அக்கட்சியின் பக்கம் காங்கிரஸ் போய் விடக் கூடும் என்ற சூழ்நிலையை இந்த வெற்றியின் மூலம் தடுத்து நிறுத்தியது.

4வது மாங்காய் – தனது மூத்த மகனும், தென் மாவட்ட திமுக அமைப்புச் செயலாளருமான மு.க.அழகிரிக்கு அரசியலில் அபாரமான இருக்கையைப் போட்டுக் கொடுத்தது.

இப்படி பல பலன்களை திமுகவுக்குக் கொடுத்துள்ளார் கருணாநிதி.

60 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் கருணாநிதி பார்க்காத ஏற்ற, இறக்கங்கள் இல்லை. ஆனால் அத்தனையையும் அவர் ஒரே மனோபாவத்தில் எடுத்துக் கொள்வதுதான் வழக்கம்.

சவால்களை சந்திப்பது கருணாநிதிக்கு கை வந்த கலை. 1969ம் ஆண்டு காங்கிரஸ் பிளவுபட்டு, அதன் மூத்த தலைவர்கள் இந்திரா காந்தியை தனிமைப்படுத்தியபோது, தனது 25 எம்.பிக்களையும் இந்திராவுக்கு ஆதரவாக நிற்க வைத்தவர் கருணாநிதி.

1971ம் ஆண்டு லோக்சபாவை கலைத்து தேர்தலுக்கு உத்தரவிட்டார் இந்திரா காந்தி. இதையடுதது துணிச்சலுடன் சட்டசபையைக் கலைத்து தேர்தலுக்கு தயாரானார் கருணாநிதி. அந்தத் தேர்தலில் கருணாநிதி கடைப்பிடித்த உத்தியால், திமுக வரலாறு காணாத வகையில், 182 சீட்களில் வெற்றி பெற்றது. தமிழக அரசியல் வரலாற்றில் இந்த சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை.

பின்னர் இந்திரா காந்தி அவசர கால நிலையை அறிவித்தபோது அதை கடுமையாக எதிர்த்தார் கருணாநிதி. ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்ற தலைவர்களுக்கு அவர் புகலிடம் கொடுத்தார்.

இதேபோல கருணாநிதி எடுத்த முக்கியமான,அதிரடி முடிவுகளில் ஒன்றுதான் எம்.ஜி.ஆரை. கட்சியிலிருந்து நீக்கியது. ஆனால் அது அவருக்கு எதிராக திரும்பியது. அதிமுகவை உருவாக்கி கருணாநிதிக்கு பெரும் சவாலாக மாறினார் எம்.ஜி.ஆர்.

1989ம் ஆண்டு தேசிய முன்னணி உருவானபோது, முதல் முறையாக சென்னைக்கு இடம் பெயர்ந்து வந்தனர் வட இந்திய தலைவர்கள். அதற்கு முக்கிய காரணம் கருணாநிதிதான். சென்னை மெரீனா கடற்கரையில் தனது நெருங்கிய நண்பரான வி.பி.சிங்கை முன் நிறுத்தி மிகப் பெரிய மாநாட்டை நடத்திக் காட்டினார் கருணாநிதி.

அதுதான் இன்று வட இந்திய அரசியலை பிராந்தியக் கட்சிகள் ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பதற்காக போடப்பட்ட முக்கிய அடிக்கல்.

வி.பி.சிங் அமைச்சரவையில் முரசொலி மாறன் அமைச்சராக இடம் பிடித்த பின்னர் தேசிய அரசியலில் திமுகவின் பங்கு முக்கியமாக மாறியது.

1989ம் ஆண்டுதான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு (எம்.ஜி.ஆர். மறைந்த பின்னர்) 3வது முறையாக முதல்வரானார் கருணாநிதி.

இந்த அரசு சந்திரசேகர் புண்ணியத்தால் ஒன்றரை வருடமே நீடித்தது. பின்னர் ராஜீவ் காந்தி மரணத்திற்குப் பின்னர் நடந்த தேர்தலில் திமுக படு தோல்வியைச் சந்தித்தது. கருணாநிதி மட்டும் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இருப்பினும், அடுத்த சட்டசபைத் தேர்தலில் திமுக விஸ்வரூபம் எடுத்தது. 1996ம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது திமுக. கருணாநிதி 4வது முறையாக முதல்வரானார்.

பின்னர் 2001ம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் திமுக தோல்வியைச் சந்தித்தது.

இருப்பினும் 2006ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. இருப்பினும் தமிழ அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக கூட்டணி ஆட்சியை மக்கள் கொடுத்தனர்.

போராட்டங்களையே தனது வாழ்க்கைக் களமாக மாற்றிக் கொண்டு விட்ட கருணாநிதி, இந்தத் தேர்தலையும் கூட ஏகப்பட்ட பிரச்சினைகளுக்கு மத்தியில்தான் சந்தித்தார்.

கூட்டணி கட்சிகள் பிரிந்து போனது, பல முனைகளிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது, விலைவாசி உள்ளிட்ட பிரச்சினைகளால் மக்கள் அதிருப்தி, ஈழத் தமிழர் பிரச்சினை, எல்லாவற்றுக்கும் உச்சமாக, உடல் நலிவு, பிரசாரத்திற்குக் கூட போக முடியாத நிலை என பல பிரச்சினைகளை திமுக கூட்டணி சந்தித்தபோதிலும், யாரும் எதிர்பாராத வகையில், சிறப்பான வெற்றியைத் தேடிக் கொடுத்திருக்கிறார் கருணாநிதி.

கடந்த முறை பெற்ற 40 சீட்களையும் திமுக கூட்டணி பெற முடியாவிட்டாலும் கூட, அதிமுக கூட்டணியை முந்த விடாமல் தடுத்து வென்றதே ஒரு சாதனைதான்.

அவ்வளவுதான் என்று எல்லோராலும் கருதப்பட்ட திமுக கூட்டணியின் அரசியல் எதிர்காலத்தை கருணாநிதியின் அணுகுமுறையும், அனுபவ அரசியலும் பீனிக்ஸ் பறவை போல உயிர்த்தெழ வைத்துள்ளது.


Thanks தட்ஸ்தமிழ்

Flash News: ஜெயலலிதாவை சந்திக்க அந்தோணி வருகிறார்.

ஜெ., வை சந்திக்கிறார் அந்தோணி

மே 15,2009,14:09 IST

சென்னை : அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்திப்பதற்காக மத்திய அமைச்சர் அந்தோணி ‌சென்னை வரயிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி – தினமலர்

http://www.dinamalar.com/latestnews.asp#17617

சென்னையில் திடீர் மின்தடை-’விஷமிகள் சதி’, 4 பேர் கைது

சென்னை: சென்னையில் பல பகுதிகளில் நேற்றிரவு திடீரென மின்சாரம் தடைபட்டது. தேர்தல் நேரத்தில் ஆளும்கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்க எதிர்கட்சிகளைச் சேர்ந்த விஷமிகளே இந்த செயல்களைச் செய்ததாக முதல்வர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மைலாப்பூர் உள்பட சென்னை நகரின் பல பகுதிகளில் நேற்றிரவு மின்சாரம் தடைபட்டது. இதையடுத்து நிருபர்களை சந்தித்த முதல்வர் கருணாநிதி, இந்த மின்தடை வேண்டுமென்றே உருவாக்கப்பட்டுள்ளது.

ஆளும் கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்குவதற்காக எதிர்கட்சிகளை சேர்ந்த குண்டர்கள் சிலர், சமூக விரோதிகள், இலாகாவில் இருந்து சில பேர் சதிவேலையில் ஈடுபட்டு மின் தடையை வேண்டுமென்றே உருவாக்கியிருக்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.

அந்த விஷமிகளில் 4 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். வேண்டும் என்றே திட்டமிட்டு செய்துள்ள இந்த விஷமத்தனத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி அரசு எல்லா நடவடிக்கைகளையும் எடுக்கும். பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். விஷமிகளை அடையாளம் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகிறேன் என்றார். இந் நிலையில் இந்தச் சம்பவம் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

போடுங்கம்மா ஓட்டு….ரெட்டை எலையப் பாத்து…!

அரசு ஊழியர்களே…..

ஒரே கையெழுத்தில் உங்களையெல்லாம் வீட்டுக்கு அனுப்பிய பெருமை வாய்ந்த ரெட்டை இலைக்கே உங்கள் ஓட்டு…..!!!

போக்குவரத்து கழக ஊழியர்களே……..

உங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியத்தையும் , போனஸ்ஸையும் தர மறுத்த ரெட்டை இலைக்கே உங்கள் ஓட்டு….!

பெரியாரின் சீடர்களே……….

தான் ஒரு பாப்பாத்தி என்று சபையிலேயே அறிவித்துக் கொண்ட அதிமுகவின் பார்ப்பனத் தலைமைக்கும் , இன்று வரை பாரதிய ஜனதாவின் குரலில் , பார்ப்பனீயத்தின் குரலை எதிரொலிக்கும் ரெட்டை இலைக்கே உங்கள் ஓட்டு….!

தமிழுணர்வாளர்களே…..

வருடக்கணக்கில் புலிகள் என்ற பேச்சை எடுத்ததற்கே சிறையில் வைகோவை சிறையில் அடைத்த அம்மாவுக்கே உங்கள் ஓட்டு.

எம்.ஜி.ஆரின் சீடர்களே….

எனக்கு எல்லாமே எம்.ஜி.ஆர். தான் என்று ஒப்பாரி வைத்த ஜெயலலிதாதான், அவர் உயிருடன் இருந்தபோதே அன்றைய பிரதமர் அமரர் ராஜீவ்காந்திக்கு எம்.ஜி.ஆர். முதல்வராக இருக்க லாயக்கற்றவர் என்று கடிதம் எழுதி உண்ட வீட்டிற்கு துரோகம் இழைத்த ஜெயலலிதாவுக்கே உங்கள் ஓட்டு…!

தமிழகத் தமிழர்களே…….

விடுதலைப்புலிகளால் தான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெடுகிறது என்று பொய்ப்பிரச்சாரம் செய்து , அத்தகைய புலிகளுக்கு ஆதரவு அளிக்கிற ஆட்சி திமுக என்று சொல்லி ஆட்சியைக் கலைக்க வைத்து புலிகளின் மீதான தடையை இந்தியாவில் முதலில் அங்கீகரித்து இன்றளவும் புலிகளின் தலைமையை வெறுத்து ஒதுக்கும் அதிமுகவுக்கே உங்கள் ஓட்டு…!!!!

‘தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி-தலைவர் பிரபாகரனைப் பிடித்து இங்கே கொண்டு வரவேண்டும்’ என்று தீர்மானமும் நிறைவேற்றிய அதிமுகவுக்கே உங்கள் ஓட்டு…!!!!

கம்யூனிஸ்டுகள் ஈழத்தமிழர்களுக்காக நடத்திய உண்ணாவிரதத்தில் விஜய்காந்த் கட்சியும் கலந்து கொண்டது என்ற காழ்ப்புணர்வு காரணமாக எவ்வித அக்கறையும் இன்றி புறக்கணித்த அதிமுகவுக்கே உங்கள் ஓட்டு….!!!

தமிழ்ச்செல்வன் மறைவிற்காக ஒரு இரங்கற்பா எழுதிய காரணத்தால் கலைஞரின் ஆட்சியையே கலைக்க வேண்டும் என்று வலியுறுத்திய ரெட்டை இலைக் கட்சிக்கே உங்கள் ஓட்டு.!!!!

ஈழத் தமிழர் என்று சொல்வதைக் கூட சகித்துக்கொள்ளாமல் , இலங்கைத் தமிழர் என்றுதான் சொல்ல வேண்டும் என்று திமிராகப் பேசிய அதிமுக தலைமைக்கே உங்கள் ஓட்டு.

சற்றேறக்குறைய ஒரு லட்சம் தமிழ் மக்களைப் பலி கொண்ட ஒரு போராட்டத்தை இதுகாறும் கொச்சைப்படுத்தி விட்டு , ஒற்றை இரவில் ஒரு சி.டி.யைப் பார்த்து புரிந்துகொண்டதாகப் புழுகும் அதிமுகவுக்கே உங்கள் ஓட்டு….!!

இன்றளவும் தமிழகத்தின் எந்தவொரு பெரிய கட்சியையும் புலிகளுக்கு ஆதரவாக , ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவதையோ , எழுதுவதையோ , ஒரு பேரணி நடத்துவதையோ அன்றாடம் எதிர்த்துக்கொண்டு, ஈழ ஆதரவினை முணை மழுக்கிக்கொண்டு , ஈழ விடுதலைப் போருக்கு ஒரு தடுப்புச் சுவராக நின்று கொண்டு , ஆயிரக்கணக்கான தமிழர்களைப் படுகொலை செய்யும் சிங்களத்துக்கு உதவிக்கொண்டு சிங்கள ரத்னாவாகக் காட்சியளித்த ஜெயலலிதாவுக்கே உங்கள் ஓட்டு.!!!!!

போடுங்கம்மா ஓட்டு………………………………..

ரெட்டை இலையைப் பார்த்து………!!!!!

வெய்யுங்கம்மா வேட்டு…..

தமிழினத்தின் எதிர்க்காலத்தைப் பார்த்து….!

சொருகுங்கம்மா ஆப்பு……….

தமிழ்நாட்டு முன்னேற்றத்தைப் பார்த்து…….

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு….!!!

நம்ம மாக்களுக்கு ?

சில செய்திகள் : உங்கள் பார்வைக்கு…!

‘ராமதாஸ் அரசியல்வாதி அல்ல…அரசியல் வியாபாரி’

பெரம்பலூர்: ராமதாஸ் அரசியல்வாதி அல்ல. அவர் ஒரு அரசியல் வியாபாரி. ராஜ்யசபா சீட்டுக்காக அணி மாறி அலைபவர் என உள்ளாட்சி துறை அமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் திமுக வேட்பாளரான நடிகர் நெப்போலினை ஆதரித்து திமுக பொருளாரும், தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சருமான ஸ்டாலின் அங்கு நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பேசுகையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு அரசியல்வாதி அல்ல. அவர் ஒரு அரசியல் வியாபாரி.

என்னைப் பார்த்து கத்துக்குட்டி எனவும், அரசியல் பாடம் கற்றுக்கொள்ள வா என்று கூறுகின்றார். நான் பல முறை எம்.எல்.ஏ.வாகவும், இரு முறை மேயராகவும் இருந்துள்ளேன். ராமதாசுக்கு சவுக்கடி கொடுப்பார்கள்…

நான் கொல்லைப்புறமாக சென்று அமைச்சர் பதவியை பெற டாக்டர் ராமதாசின் மகன் அல்ல. ராஜ்யசபா சீட்டுக்காக அணி மாறி அலைபவர் தான் ராமதாஸ். முயற்சி இல்லாமலே மகனை அமைச்சர் ஆக்க முயல்கிறார். இந்த முறை தமிழக மக்கள் ராமதாசுக்கு சவுக்கடி கொடுக்க தயங்கமாட்டார்கள் என்றார்.

*****

தமிழ் ஈழம் பெற்றுத் தருவோம் : முதல்வர் கருணாநிதி உறுதி

மே 07,2009,00:34  IST

சென்னை : ”பொய்ப் பிரசாரங்களை நம்ப வேண்டாம்,” என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக முதல்வர் கருணாநிதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், சென்னையில் நேற்று சோனியா கலந்துகொள்ள இருந்த பொதுக்கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால், முதல்வரின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் கிளம்பின. ஆனால், நேற்று இரவு மருத்துவமனையிலிருந்து முதல்வர் கருணாநிதி அளித்த ஒரு பேட்டியில், ‘பொய்ப் பிரசாரங்களை நம்ப வேண்டாம். வெற்றி ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு தொண்டர்கள் பணியாற்ற வேண்டும். வதந்திகளை நம்ப வேண்டாம். இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு நாம் ஓரளவு நிம்மதியை அளித்திருக்கின்றோம். அடுத்து அவர்கள் பெற வேண்டிய ஈழத்தையும் பெற்றுத் தருவதற்கு நம்மாலான முயற்சிகளை மேற்கொள்வோம்’ என்று தெரிவித்துள்ளார்.

*****

கருணா‌நி‌தி தனி அறை‌க்கு மாற்றம்

உட‌ல்‌ ‌நிலை பா‌தி‌க்க‌ப்‌ப‌ட்டு தீவிசிகிச்சைபபிரிவிலஇருந்த முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி, இ‌ன்று தனி அறைக்கமாற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர். அவ‌ரது உட‌ல்‌நிலையை மரு‌த்துவ‌ர்க‌ள் ‌தீ‌விரமாக ‌‌க‌ண்கா‌ணி‌த்து வரு‌கி‌ன்றன‌ர்.

காய்ச்சல், முதுகுவ‌லி காரணமாசிதினங்களுக்கு முன்பமுதலமை‌ச்ச‌ரகருணாநிதி செ‌ன்னை‌ அப்போலமருத்துவமனையிலஅனுமதிக்கப்பட்டார்.

அங்கமுதல்மாடியிலஉள்தீவிசிகிச்சபிரிவிலகடந்த 4 நாட்களாக மரு‌த்துவ‌ர்கள் அவருக்கசிகிச்சஅளித்து வ‌ந்தன‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் கருணா‌நி‌தி‌யி‌ன் உடல்‌நிலை முன்னேற்றம் அடை‌நததை தொடர்ந்தஇன்றகாலதீவிசிகிச்சபிரிவிலஇருந்து 3-வதமாடியிலஉள்தனி அறைக்கமாற்றப்பட்டு‌ள்ளா‌ர். தொடர்ந்து அவரது உடலநிலையை மரு‌த்துவ‌ர்க‌ள் கண்காணித்தசிகிச்சஅளித்தவருகி‌ன்றன‌ர்.

அவருக்கஓய்வதேவஎன்பதாலபார்வையாளர்களுக்கஅனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பெரியாரின் மூத்திரச்சட்டியும் , கலைஞரின் உடல்நிலையும்!

எத்தனை ஏளனப் பேச்சுக்கள்.?

பயந்து போய் அப்பல்லோவில் ஒளிந்து கொண்டாராம்.

சோனியாவும் , இவரும் ட்ரங்க்கால் போட்டுப் பேசி செருப்படி வாங்காமல் தப்பித்துக்கொண்டார்களாம்…….

ஒரு முதியவர் , 85 வயதைத் தாண்டியவர். அறுபது ஆண்டுகளாக நமது உரிமைகளுக்காகப் போராடியவர்.

இன்றைக்கும் தமிழகத்தின் முதல்வராக இருப்பவர். தமிழக சட்டமன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக இருக்கும் தி.மு.கழகத்தின் தலைவராக இருப்பவர்.

இவரை இப்படியெல்லாம் ஏசுவது பகுத்தறிவின் குரலா ? பெரியார் கற்றுத்தந்த சுயமரியாதையின் குரலா ? இருக்க முடியாதே….!

காரணம் என்ன சொல்கிறார்கள் ?

காங்கிரசின் தமிழின அழிப்பிற்கு துணை போனாராம்….!

ஆமாம் , இராஜபக்சேவின் குரலை தமிழகத்தில் ஜெயலலிதா அவர்கள் பேசிய போது இதே நெடுமாறன் கருப்புக்கொடி காட்டினாரா ?

இன்றைக்கு கலைஞரின் உடல்நலமின்மையைக் கூட கொச்சைப்படுத்தும் வைகோ அவர்கள் ஜெயலலிதாவை இடித்துரைத்தாரா ?

இதே பெரியார் திராவிடர் கழகம் , இன்று இண்டு இடுக்கெல்லாம் “போடுங்கம்மா ஓட்டு…..ரெட்டை எலையை பார்த்து….” என்று கூவுகிறதே…………………………………………….

ராமர் பாலம் இருக்கிறது என்று சொல்கிறதா என்ன ?

வீரமணியை சமரசங்களுக்கு உட்பட்டு பகுத்தறிவை அடகு வைத்து விட்டார் என்று சொல்லித்தானே திராவிடர் கழகத்தை உடைத்தீர்கள்??? இன்றைக்கு பார்ப்பனீயத்தின் தமிழகக் கிளையான ஜெயலலிதாவை ஆதரிப்பதென்பது சமரசங்களுக்கு உட்பட்டது ஆகாதா ?

உயரிய நோக்கங்களுக்காக நாம் பெரிதும் மதித்த தந்தை பெரியார் திராவிடர் கழகம் இன்று நம் கண் முன்னால் அதனுடைய பொலிவினை இழந்து நிற்கிறதே………..

நீங்கள் அரசியல் காரணங்களுக்காக என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள்.

கலைஞரின் முதுமையை, அவரது உடல்நிலையை விமர்சிப்பது கொஞ்சமேனும் சகிக்கவில்லை.

அத்தகைய விமர்சனங்கள் பெரியாரின் மூத்திரச்சட்டியை இதே இனம் சுமந்து வீதிவீதியாக சென்ற போது பார்ப்பனீயம்  வைத்த விமர்சனங்கள் போன்றதே.

இந்தத் தேர்தல் , திமுகவிற்கு முதல் தேர்தல் – ஆம்…

கலைஞர் என்னும் ஆளுமையின் முழு வீச்சின்றி , முழு பிரச்சாரமின்றி , முழு உழைப்பின்றி கழகம் சந்திக்கும் முதல் தேர்தல். திமுகவின் கொள்கைகளால் , கலைஞர் என்னும் ஆலமரத்தின் விழுதுகள் நாங்கள் வென்று காட்டுவோம்.

தமிழினத்தின்  துரோகிகள் யார் என்பதை காலம் சொல்லும்….

ஆம் காத்திருங்கள் காலம் சொல்லும்..!

அன்றும் திமுக தமிழர்களுக்கு காவலரணாகத்தான் நிற்கும்…!!!

சந்தர்ப்பவாத கம்யூனிஸ்டுகளுக்கா உங்கள் ஓட்டு ?

கேரளாவில் கம்யூனிஸ்டுகளுக்கு காங்கிரஸ் எதிரி. ? நேற்றுவரை மத்தியில் காங்கிரசுடன் கூட்டு…! இன்று காங்கிரசுக்கு எதிரி.

மதவாதத்தை எதிர்ப்போம். பிஜேபியை ஆட்சிக்கு வர விட மாட்டோம் என்ற முழக்கம். பிஜேபி ஆளும் மாநிலங்களில் கூட கொண்டு வரத் தயங்கிய மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்த அதிமுகவுடன் தமிழகத்தில் கூட்டு…..!

தொழிலாளர் வர்க்கத்திற்காக அனுதினமும் பாடு படுவோம் என்று சொல்லும் கம்யூனிஸ்டுகள் கொஞ்சம் பக்கங்களை பின்னோக்கி புரட்டிப் பார்க்கட்டுமே.

ஒரே கையெழுத்தில் லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது யார் ?

லாபம் இல்லை , அதனால் போனஸ் இல்லை என்று போக்குவரத்து ஊழியர்களை அலைக்கழித்தது யார் ?

இதே அதிமுக தானே ?

மனதைத் தொட்டுச் சொல்லுங்கள் கம்யூனிஸ்டுகளே , சேது சமுத்திரத் திட்டம் தேவை என்று அனுதினமும் நீங்கள் குரல் கொடுக்கவில்லையா ?  காங்கிரசு அரசு அதைத் தாமதப்படுத்துகிறது என்று குறை சொல்லவில்லையா ?

இதே அதிமுக இன்று என்ன சொல்கிறது. ?

சேது சமுத்திரத் திட்டத்தை முடக்குவோம் என்று சொல்கிறது…..அதைப் பற்றீ எதுவுமே பேசாமல் இருப்பது சந்தர்ப்பவாதம் அன்றி வேறென்ன. ?

அடுத்தது ஈழம் …..

மதிப்பிற்குரிய தா.பாண்டியன் அவர்களே , வரதராசன் அவர்களே…….

நீங்கள் ஈழத் தமிழர்களின் நன்மை கருதியா அதிமுகவுடன் கூட்டுப் போட்டீர்கள்? நீங்கள் அதிமுகவுடன் கூட்டணி சேரும் போது அதிமுகவின் நிலை என்ன ?

இலங்கையில் ஒற்றையாட்சி முறை. விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள். தமிழ்ச்செல்வனுக்கு எழுதிய இரங்கல் கடிதம் கூட இறையாண்மைக்கு எதிரானது. பிரபாகரனைப் பிடித்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும், போர் நடக்கும் போது சில தமிழர்கள் சாகத்தான் செய்வார்கள் என்று ராஜபக்சேவே சொல்லத்தயங்கியவற்றை எல்லாம் வெளிப்படையாகப் பேசியவர் தானே புரட்சித் தலைவி அவர்கள்?

இன்று அவர் ஈழத்துக்கு குரல் கொடுப்பது நாடகமில்லையென்றும் , கருணாநிதிதான் நாடகம் நடத்துகிறார் என்றும் சொல்வது என்ன நியாயம் ?

சரி , மூன்றாவது அணியில் இந்திய அளவில் பெரிய கட்சி மார்க்சிஸ்டு.

நாளை ஒருவேளை மூன்றாவது அணி ஆட்சியமைக்குமானால் , மார்க்சிஸ்டு அதற்கு தலைமையேற்குமானால் மார்க்சிஸ்டுகளின் ஈழ நிலை என்ன ?

ஒற்றையாட்சிக்குட்பட்ட இலங்கை. தனி ஈழம் கோருவது தவறு ….அதுதானே மார்க்சிஸ்டுகளின் நிலை….? இதுதானே இ.கம்யூவின் நிலையும் கூட ? இன்றும் கூட கம்யூனிஸ்டுகள் தங்கள் நிலையை மாற்றிக் கொள்ளவில்லையே ? ஆட்சிக்கு வந்தால் மட்டும் எப்படி திடீரென்று தங்கள் நிலையை மாற்றிக்கொள்ளப்போகிறார்கள் ?. இவர்கள் அனைவரும் இணைந்த கூட்டரசு எப்படி இலங்கைப் பிரச்சினையில் ஒத்த கருத்தைக் கொண்டு வந்து தமிழீழம் அமைக்கப் போகிறார்கள் ?

தேர்தல் வரை எதையேனும் மக்களை ஏமாற்றுவதற்குத் தானே நீங்கள் ஈழத்தைக் கையிலெடுத்திருக்கிறார்கள்?? இதுதானே சந்தர்ப்பவாதம் ? இத்தகைய சந்தர்ப்பவாதக் கூட்டணிக்கா உங்கள் ஓட்டு ?

அது ஒருபுறமிருக்க , சீனாவின் சொல்படியே எப்போதும் நடக்கும் இந்த கம்யூனிஸ்டுகள் சீனாவின் முழு ஆதரவுடன் நடக்கும் இந்தப் போரையா இராணுவத்தை அனுப்பி நிறுத்தப் போகிறார்கள் ? இன்றுவரை மாண்புமிகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கூற்றை அங்கீகரித்துப் பேசியிருக்கிறார்களா இவர்கள் ?

ஈழத்திற்கான ஆதரவு சத்தியமாக அவசரத் தேவைதான். ஆனால் , அவசரகதியில் ஓட்டுக்களைப் பெறுவதற்காகவே எழுப்பும் கோஷங்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள். அதன் பலனை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அனுபவிக்கப் போகிறவர்கள் நம்மை விட ஈழத்தமிழர்கள்தான்.
தமிழ் மக்களே………………………….சிந்தியுங்கள்.

எக்ஸ்குஸ் மீ சார்…எலக்சன் வருது….! என்ன பண்ணலாம்?

வணக்கம் தமிழ் வலையுலக நண்பர்களே..ரொம்ப்போ நாளைக்கு அப்புறம் உங்களே எல்லாம் சந்திக்கிறதுலே ரொம்ப மகிழ்ச்சி.

திமுகவோட ஈழநிலையில் கொஞ்சம் வருத்தப்பட்டு ஒதுங்கியிருந்த உடன்பிறப்புகள்ல நானும் ஒருத்தன். ஆனா இப்போ தெளிவா இருக்கேன்……….. நெறைய வருத்தங்கள் இப்பவும் உண்டு. ஆனா இந்த ஈழ ஆதரவுப் போர்வையில் இருக்கும் தமிழுணர்வாளர்கள் பண்ணுற அட்டூழியத்தால நமது திமுக / கலைஞர் மீதான புரிதல் எவ்ளோ தவறுன்னு தெளிவா புரிஞ்சிடுத்து.

எக்ஸ்குஸ் மீ மேடம் எலக்சன் வருதுன்னு போயஸ் கார்டனுக்கு போன் வருது..உன்னி கிருஷ்ண பணிக்கரின் ஆலோசனைப் படி ஈழத்திற்கு குரல் கொடுக்குற ஒருத்தர்.

எக்ஸ்குஸ் மி சார். எலக்சன் வருதுன்னு தைலாபுரத்துக்கும் அதே போன் வருது…..”ஆஹா” அஞ்சு வருடம் ஆட்சிலே இருந்தாச்சே …இனி நாம புடுங்கிக் கிழிச்சது என்னன்னு ஓட்டுப் போடறவங்க கேப்பாங்களேன்னு பயந்து போய் எதிர்க்கட்சி வரிசையிலே போய் நின்னுஎதுவுமே செய்யலே இந்த ஆட்சி அப்படீன்னு குரல் கொடுக்கற (அதாவது நாங்க எதுவுமே  ) ஒரு கட்சி…..

பிரபாகரனை நேத்து ஆதரிச்சேன். நாளைக்கும் ஆதரிப்பேன்னு ஒருத்தர் சொன்னார்.
அட இன்னிக்கு ? அட அதெப்படி முடியும் ? நாந்தான் போயஸ் தோட்டத்துல இருக்கேனே அப்படீன்னார் ஒருத்தர். இன்னிக்கு அம்மா வரத்தான் அகிலமே காத்திருக்கு அப்படீங்கறார் அவரே…….இவுரு இலங்கைத் தமிழருக்கா அம்மாவோட கூட்டு சேர்ந்தார் ? கேட்டுச் சொல்லுங்கோ கொஞ்சம் கலிங்கப்பட்டி பக்கமா போய்…!

இந்த திடீர் ஈழ ஆதரவுக் கூட்டணியில இ.கம்யூ வும் , மா. கம்யூ வும் புது வரவுகள். மா.கம்யூவோட ஈழக்கொள்கை என்ன ? புலிகளுக்கெதிரான , ஈழத் தமிழர்களுக்கு எதிரான ஒற்றையாட்சிக்குட்பட்ட இலங்கைதானே ? இல்லையென்று சொல்லச் சொல்லுங்கள் காம்ரேடுகளை ?

இன்றும் நாம் மதிக்கும் தோழர் நல்லக்கண்ணுவிடம் கேட்டுச்சொல்லுங்கள் புலிகளின் மீதான தங்கள் நிலைப்பாட்டை……..

இன்று தமீழீழம் அமைப்பேன் என்று முழக்கமிடும் புரட்சித் தலைவியிடமாவது கொஞ்சம் புலிகளின் மீதான நிலைப்பாட்டை கேட்டுச் சொல்லுங்களேன்……..

இப்படி தெளிவில்லாமல் ஓட்டுக்கு நாடகமாடும் இவர்களைப் போற்றும் சிலர் கலைஞரை , திமுகவை நாடகம் ஆடுகிறார்கள் என்று குற்றஞ்சொல்லுகிறார்கள்.

கலைஞரை , காய்ச்சலாலும் , முதுமையாலும் அவதியுற்று மருத்துவமனைக்குப் போயிருக்கும் அவரைப் பார்த்து அப்படியே போய்ச் சேரக் கூடாதா என்று கேட்கிறார்கள்.

காது கொடுத்துக் கேட்க இயலாத வசவு வார்த்தைகளால் அர்ச்சிக்கிறார்கள். இதில் என்ன எழவு என்றால் இவர்கள் நேற்றுவரை உதயசூரியனுக்கு ஓட்டுப் போட்டவர்களாம். என்ன கொடுமைங்க இது ?

இன்று நமக்கும் இலேசாக இருக்கும் திமுக மேலான வருத்தம் என்பது திமுகவின் / கலைஞரின் நிலைப்பாட்டில் ஏமாற்றமே. காரணம் நாங்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தோம். அந்த மிகுதியான பற்றின் விளைவே மெல்லிய கோபம். அதற்கு எமக்கு உரிமை இருக்கிறது.

என்றுமே கலைஞர் மேலோ , திமுக மேலோ பற்றுக் கொண்டிராதவர்கள் திடீரென்று கலைஞர் மேல் வசவுகளைப் பொழிவதென்பது முற்றிலும் நிராகரிக்கத் தக்கது. அப்படி திமுகவின் நற்பெயருக்கும் , கலைஞருக்கும் ஏதும் தீங்கு நிகழ்த்த நடக்கும் முயற்சிகளை நிறுத்த நாங்கள் கேடயங்களாக இருப்போம்.

திமுக என்னும் அருபதாண்டு கால சரித்திரத்தை முடக்கும் முயற்சியில் இன்று தமிழகத்தின் தீண்டத்தகாத சக்திகள் ஒன்று கூடி இருக்கின்றன. ஆனால் சக்தி மிக்க உடன்பிறப்புக்கள் அதை வென்று காட்டுவார்கள்.

அதை சரித்திரம் நிச்சயம் பதிவு செய்யத்தான் போகிறது.