டோண்டு சார் – இன்னும் இரட்டை வேட “மோடி”தான் பிரதமராக வேண்டுமா?

கொஞ்ச நாளைக்கு முன் டோண்டு சார் , யாரோ ஒரு வட இந்தியர் மோடியைச் சந்தித்தது பற்றி சிலாகித்து எழுதியிருந்தார். மோடி மாதிரி ஒருவர்தான் இந்தியாவின் பிரதமராக வேண்டும். இல்லாவிட்டால் இந்தியா குடி முழுகிப் போய் விடும் என்று.
தீவிரவாதம் ,தீவிரவாதம் என்று கூவிக்கொண்டும் , அதற்கு பொடா சட்டத்தைக் கொண்டு வந்தாக வேண்டும் என்றும் கூப்பாடு போட்ட காவிக்கட்சிக்காரர்களின் வேடம் , “புரோகித்”தின் கைதை நியாயப்படுத்தும் போதே ஓரளவு கலைந்துவிட்டது எனலாம்……
இப்போது “புரோகித்” விடயத்தில் எந்நேரமும் தீவிரவாதத்தை [...]

ஈழம்:சட்டமன்ற கட்சித்தலைவர்கள் கூட்டம் – கலைஞர்

”இல‌ங்கை‌த் த‌மிழ‌ர் ‌பிர‌ச்சனை‌யி‌ல் நா‌ம் எடு‌க்க வே‌ண்டிய நடவடி‌க்கைக‌ள் ப‌ற்‌றி முடிவு செ‌ய்ய நாளை ச‌ட்டம‌ன்ற க‌ட்‌‌சி‌த் தலைவ‌ர்க‌ள் கூ‌ட்ட‌ம் எனது தலைமை‌யி‌ல் செ‌ன்னை தலைமை‌ச் செயலக‌த்‌தி‌ல் நடைபெறு‌கிறது” எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றினா‌ர்.
செ‌ன்‌னை தலைமை‌ச் செயலக‌த்த‌ி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், இலங்கை‌த் தமிழர் பிரச்சனையில் நாளுக்கு நாள் இலங்கையில் வாழும் தமிழர்கள் உயிர் உடமைகளை இழந்து வாழ்வதற்கே பயந்து பாதிக்கப்படும் நிலையில் மேலும் மேலும் நம் சிந்தை கலக்கும் செய்திகள் வந்து கொண்டிருப்பதால் அது [...]

கலைஞரின் குறுக்கு விசாரணைக்கு பதில் சொல்ல ஜெயலலிதா தயாரா?

கோர்ட்டுக்கு நேரடியாக வந்து குறுக்கு விசாரணைக்கு பதிலளிக்க தயாரா? என்று ஜெயலலிதாவுக்கு கருணாநிதி சவால் விடுத்துள்ளார்.

பதில் நோட்டீஸ்
சட்டக் கல்லூரி மாணவர் மோதல் தொடர்பாக கோவையில் முதல்-அமைச்சர் கருணாநிதி கருத்து கூறி இருந்தார். அது தனது நன்மதிப்பை கெடுத்ததால், இதற்கு ரூ.1 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அவதூறு வழக்கு தொடர இருப்பதாகவும் கருணாநிதிக்கு ஜெயலலிதா சார்பில் அ.தி.மு.க. வக்கீல் நவநீதகிருஷ்ணன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
இதற்கு பதிலளித்து கருணாநிதியின் சார்பில் நவநீதகிருஷ்ணனுக்கு கூடுதல் [...]

“டோண்டு” சாருக்கு கலைஞரின் விளையாட்டின் மீதான திடீர் அக்கறை!

அது சின்னக்கவுண்டர் என்ற திரைப்படம்னு நெனைக்கிறேன்……! எந்நேரமும் தேவையில்லாத ஆராய்ச்சி பண்ணிக்கொண்டே இருப்பார் திரு.செந்தில் , கவுண்டமணி அதைக்கிண்டலடிப்பார் கவுண்டமணி….
அத்தகைய செந்தில் சாரின் தேவையற்ற ஆராய்ச்சி போலவே இருக்கிறது ஜூவியின் ல்லுல்லாயி ஆராய்ச்சியும் அதையொட்டிய டோண்டூ சாரின் பதிவும்….!!
கிண்டலாகச் சொன்னேன் என்று பெருந்தன்மையுடன் சொன்ன பிறகும் அதற்காக மான நஷ்ட வழக்குப்போடும் ஜெயல்லிதாவைக் கண்டிக்க துப்பில்லாதவர் அவர் என்றே நாம் கருதுகிறோம்…
மேம்பால ஊழல் வழக்கென்று கலைஞரை நள்ளிரவில் கைது செய்தாரே , இன்று அந்த வழக்கில் எந்த [...]

என்று தணியும் எங்கள் சினிமா மோகம்?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
என்று தணியும் எங்கள் சினிமா மோகம்?????

சாமிக்கு பால் ஊத்தினான் ,

சாமியே பால் குடிக்குதுன்னான் , இப்ப

ஆசாமிக்கு பால் ஊத்துறான்….

ஆசாமி சாமின்னா , சாமி ஆசாமியா??

ரசிகனா இருந்துக்கோ , ஆனா முட்டாள்

ரசிகனா இருக்காதே……!!!

ஏத்திவிடும் ஏணியா இரு தப்பில்ல , ஆனா

வாழ்க்க புல்லா ஏணியாவே இருந்துடாதே !!

நீ எப்ப ஏறப்போறே ஏணியில???

நடிகனுக்கு பால் ஊத்துற ரசிகனே ,

உன் வீட்டுல பால் இருக்கா பாத்தியா?

நிலவுக்கு எப்படிப்போக ன்னு நீ

ஆராய்ச்சி பண்ண வேணாம்…!!

வாழ்க்கையில முன்னெற

அறீவையாவது உபயோகி…!!!

 
புரிஞ்சி பொழைச்சுக்கோ , இல்லை

நாசமாப் போயிக்கோ!!!

ரெண்டுமே உன் [...]

அரசியலுக்கான திறவுகோல் கோடம்பாக்கத்திலா?

“கேட்ல என்ன தகராறு வாட்ச்மேன்???…. ஒரே சத்தமா இருக்கு ? ” இப்படிக்கேட்கிறார் ஒரு பிரபல சினிமா தயாரிப்பாளர்………
“அய்யா , ஏதோ கட்சி ஆரம்பிக்கணுமாம் , அதுக்குத்தான் உங்ககிட்ட வாய்ப்புக் கேட்டு வந்திருக்கிறேன்னு ஒரே ரகளை பண்ணறான் சார் இந்த ஆளு , போகச் சொன்னா போக மாட்டேன்கிறான்…” என்கிறார் அந்த வயதான வாட்ச்மேன்….
அரசியலுக்கு வர , என்கிட்ட என்ன எதிர்ப்பார்க்கிறான் அவன் என்ற ஆச்சரியத்தில் , உள்ள அனுப்புப்பா , என்னன்னு கேட்கலாம் என்றவர் , [...]

கலைஞர் செயல்பாடு : ஸ்டாலின் பெருமிதம்..!

கோவை: அண்ணாவின் பெயரில் சிலர் கட்சி நடத்துகின்றனர். ஆனால் அண்ணாவின் கொள்கை, லட்சியங்களை செயல்படுத்தும் ஒரே தலைவர் கருணாநிதி மட்டுமே என்று தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில்,
அண்ணாவின் பெயரில் சிலர் கட்சி நடத்துகின்றனர். அவர்கள் எல்லாம் அறிக்கைதான் விடுகின்றனர். ஆனால் அண்ணா நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதில்லை.
தமிழகத்தில் இன்று யார் யாரோ திடீர் தலைவராகி விடுகின்றனர். அவர்கள் எல்லாம் அடுத்து நாங்கள் தான் முதல்வர் என்கின்றனர்.
கடந்த 1957ம் ஆண்டு 15 இடங்களிலும், 1962ல் 50 இடங்களிலும் [...]

தை ஒன்றே தமிழ் புத்தாண்டு….பேரிகை கொட்டி வரவேற்போம் !!

தை ஒன்றே தமிழ்ப்புத்தாண்டு என்று தமிழக அரசு முழுதுமாய் சட்டமியற்றி அதன்படி கொண்டாடப்படும் முதல் தமிழ்ப்புத்தாண்டு வரும் தைப்பொங்கல் தினமேயாகும்…..!!!
பல நூறு வருடங்களாய் ஆரியப் பழக்கத்தினால் தமது வருடப்பிறப்பைக் கூட அறியாமல் , இருளில் மூழ்கியிருந்த தமிழினம் இந்த ஆண்டு முதல் தமது உண்மையான புத்தாண்டை கொண்டாடவிருக்கிறது…………
இன்னும் இரண்டே மாதங்கள்தான் இடைவெளி…….
ஆண்டாண்டு காலமாய் அடியொற்றி வந்த மூடப்பழக்கத்தை ஏதோ சில சட்டங்கள் போட்டு மட்டும் மாற்றிட முடியாது……ஆனாலும் , எந்த அடிப்படையைக்கொண்டு இந்த தை ஒன்று தமிழ்ப்புத்தாண்டாக [...]

சாதிப் பேயின் கோரத்தாண்டவம் !!!!

எங்கோ எதிரிகள் மண்ணாகிப்போயினர் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே என்ற வாக்கிற்கிணங்க , மொத்தத் தமிழினமும் இலங்கைப்பிரச்சினை கண்டு தமிழர்கள் எனும் மாபெரும் இனமாய் தமது உரிமைகளுக்கு போராட வேண்டிய , போராடிக்கொண்டிருக்கிற ஒரு சூழலில் மொத்த தமிழினத்திற்கும் ஒரு அவமானமாய் சட்டக்கல்லூரியில் ஒரு கோர சம்பவம் நடை பெற்றிருக்கிறது…
படித்த அறிவு ஜீவிக்கள் கூட எங்கோ ஒரு மூலையில் சில கிராமங்களில் படிக்காத பாமர மக்களும் , கிராமத்து பெரிசுகளும்தான் சாதியை வளர்க்கின்றனர் என்று குற்றம் சாட்டினர்…….நகரங்களில் [...]

நிலா பெண்ணே’.. கலைஞர் கவிதை

‘நிலா பெண்ணே’.. கருணாநிதி கவிதை

சென்னை: நிலவில் இந்திய தேசியக் கொடியோடு ஒரு விண்கலத்தை தரையிறக்கிக் காட்டிய இஸ்ரோ விஞ்ஞானிகளைப் பாராட்டி முதல்வர் கலைஞர் ஒரு கவிதை எழுதியுள்ளார்.

அந்தக் கவிதை:
வான் முகத்தில் நகக்குறி போல்
இருக்கின்ற நிலாப் பெண்ணின்
தேன் கிண்ண இதழ்களிலே முத்தமிட்டு-
இந்திய நாட்டுத்
தேசியக்கொடிதனையும் கையில்
கொடுத்து விட்டுத் திரும்பி வரும்
திறமைமிகு விஞ்ஞானத்தின் கரம் குலுக்கி
வாழ்த்துகின்றோம்.
புராணத்தில் வரும் சந்திரனோ;
குருவின் மனைவி தாரைக்கு;
புதியதோர் காதலன் என்று புராணமே
கூறி வணங்கும்!
பாம்புகள் இரண்டு ராகுவும் கேதுவும்
சந்திரனை விழுங்குமாம்;
பஞ்சாங்கம் அதனை “கிரகணம்” என
விளம்புமாம்!
அனைத்தும் பொய், புளுகு, கற்பனையெனத்
தூக்கி [...]