தமிழக அரசை தர்மசங்கடப்படுத்தாதீர்கள் – கலைஞர்

சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்சினையில், சட்ட விரோதமான காரியங்களில் ஈடுபட்டு சிலர் அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் தனித்து என்னால் எதுவும் செய்ய முடியாது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கையில் நடைபெறும் தமிழ் இனப் படுகொலை, நாற்பது ஆண்டுக் கால வரலாற்றுக்குரிய தொடர் நிகழ்ச்சியாகி விட்டது.
அதைத் தடுத்து நிறுத்தித் தமிழர்க்கு உரிமை பெற்றுத் தர போர்க்கோலம் பூண்டவர்கள், பகைவர்கள் மீது பாய்ந்திடாமல்; சகோதர யுத்தம் நடத்துவதிலேயும் அவற்றில் மாண்டு [...]

சந்தேக சாம்பிராணி…

நாளையே (07.10.2008 ) காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இதில் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், மணிசங்கர் அய்யர், வாசன் மற்றும் இளங்கோவன், காங்கிரஸ் எம்பிக்கள் பங்கேற்கவுள்ளனர். கட்சியின் மத்திய பார்வையாளர்களும் பங்கேற்கின்றனர். மேலும் ஆட்சியில் பங்கு கோஷத்துக்கு மீண்டும் உயிர் கொடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
சந்தேக சாம்பிராணி
என்னாங்கோ , நேத்துதான் உங்க சென் ட்ரல் மினிஸ்டர் இளங்கோவன் ஆட்சியில பங்கு வேணாம்னார் , இப்ப இப்படி சொல்றீங்கோவ்??? ஒரு வேளை அவுரு சென் ட்ரல் மினிஸ்டரா இருக்கறதால [...]

புதிய தமிழகம் கிருஷ்ணசாமி கலைஞரிடம் முறையீடு!

சென்னை: உசிலம்பட்டி அருகே தனது கார் மீது நடந்த தாக்குதல் குறித்தும், அங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் வாலிபர் பலியானது குறித்தும் இன்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.
உசிலம்பட்டி அருகே உத்தபுரத்தில் தீண்டாமை சுவர் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.
இந் நிலையில், அங்கு சென்ற புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் கார் ஏழுமலை என்ற இடத்தில் தாக்கப்பட்டது. இதனால் அந்தப் [...]

இலங்கை தமிழர்களுக்கு 80,000 உணவு-துணி பாக்கெட்டுகள்

புதன்கிழமை, நவம்பர் 5, 2008

சென்னை: இலங்கைத் தமிழர்களுக்கு கோ-ஆப்டெக்ஸ் வழங்கியுள்ள ரூ. 6 கோடி மதிப்பிலான வேட்டி, சேலை உள்ளிட்ட துணிகளும், தமிழக உணவுத்துறை ஒதுக்கியுள்ள அரிசி, பருப்புகள் ஆகியவையும் இரவு பகலாக பேக் செய்யப்பட்டு வருகின்றன.
80,000 பேருக்கு வழங்கும் வகையில் அவை பேக் செய்யப்பட்டு வருகின்றன.
இலங்கை தமிழர்களுக்கு 800 டன் உணவு பொருட்கள் வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதி இலங்கை தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும்படி கேட்டுக் கொண்டார். இதையடுத்து நிவாரண [...]

நாங்கள் பேசுவதனை ‌நிறு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல் நீங்கள் போரை ‌நிறு‌த்துங்கள்: பார‌திராஜா

[புதன்கிழமை, 05 நவம்பர் 2008, 10:31 பி.ப ஈழம்] [கி.தவசீலன்]

நா‌ங்க‌‌ள் பே‌சுவதனை ‌நிறு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல் ‌நீ‌ங்க‌ள் போரை ‌நிறு‌த்து‌ங்க‌ள் எ‌ன்று ‌‌இயக்குநர் இமயம் பார‌திராஜா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்ய‌ப்படுவதை கண்டித்து தென்னிந்திய திரைப்பட சம்மேளன தொழிலாளர்கள் இன்று புதன்கிழமை நடத்திய உண்ணாநிலைப் போராட்டத்தில் பாரதிராஜா ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
உலக‌த்‌தி‌ற்கு த‌‌மி‌ழ் இரு‌ப்பதை, ஏ‌ன் த‌மிழை‌ கொ‌ண்டு செ‌ன்றவ‌ன் இல‌ங்கை‌த் த‌‌மிழ‌ன்தா‌ன். த‌மிழ‌ன் எ‌ன்ற இன‌ம் இரு‌ப்பதை உல‌‌கி‌ற்கு பறை சா‌ற்று‌கி‌ன்றவ‌ன் த‌மிழ‌ன்தா‌ன். அ‌த்தகைய [...]

ஈழத்திற்கு உணவு நிவாரணத்தை விரைவுபடுத்துமாறு திமுக கோரிக்கை

இலங்கை தமிழர்களுக்கான உணவு நிவாரணத்தை விரைவுபடுத்துமாறு திமுக மத்திய அரசிடம் கோரிக்கை

[ வியாழக்கிழமை, 06 நவம்பர் 2008, 02:26.53 AM GMT +05:30 ]

இலங்கை தமிழர்களுக்காக இந்தியா அனுப்பவுள்ள 800 தொன் நிவாரணப் பொருட்களையும் உடனடியாக அனுப்பவேண்டும் என தமிழத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் டி ஆர் பாலு, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் இந்தியாவின் உணவு மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்கள் யாவும் இலங்கை அரசாங்கத்தின் ஊடாக அல்லாமல் சர்வதேச நிறுவனங்களின் ஊடாக வன்னிக்கு [...]