கலைஞரின் குறுக்கு விசாரணைக்கு பதில் சொல்ல ஜெயலலிதா தயாரா?

கோர்ட்டுக்கு நேரடியாக வந்து குறுக்கு விசாரணைக்கு பதிலளிக்க தயாரா? என்று ஜெயலலிதாவுக்கு கருணாநிதி சவால் விடுத்துள்ளார்.

பதில் நோட்டீஸ்
சட்டக் கல்லூரி மாணவர் மோதல் தொடர்பாக கோவையில் முதல்-அமைச்சர் கருணாநிதி கருத்து கூறி இருந்தார். அது தனது நன்மதிப்பை கெடுத்ததால், இதற்கு ரூ.1 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அவதூறு வழக்கு தொடர இருப்பதாகவும் கருணாநிதிக்கு ஜெயலலிதா சார்பில் அ.தி.மு.க. வக்கீல் நவநீதகிருஷ்ணன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
இதற்கு பதிலளித்து கருணாநிதியின் சார்பில் நவநீதகிருஷ்ணனுக்கு கூடுதல் [...]