”இலங்கைத் தமிழர் பிரச்சனையில் நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி முடிவு செய்ய நாளை சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் எனது தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது” என்று முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கைத் தமிழர் பிரச்சனையில் நாளுக்கு நாள் இலங்கையில் வாழும் தமிழர்கள் உயிர் உடமைகளை இழந்து வாழ்வதற்கே பயந்து பாதிக்கப்படும் நிலையில் மேலும் மேலும் நம் சிந்தை கலக்கும் செய்திகள் வந்து கொண்டிருப்பதால் அது [...]
