சென்னை: உசிலம்பட்டி அருகே தனது கார் மீது நடந்த தாக்குதல் குறித்தும், அங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் வாலிபர் பலியானது குறித்தும் இன்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.
உசிலம்பட்டி அருகே உத்தபுரத்தில் தீண்டாமை சுவர் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.
இந் நிலையில், அங்கு சென்ற புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் கார் ஏழுமலை என்ற இடத்தில் தாக்கப்பட்டது. இதனால் அந்தப் [...]
