எங்கோ எதிரிகள் மண்ணாகிப்போயினர் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே என்ற வாக்கிற்கிணங்க , மொத்தத் தமிழினமும் இலங்கைப்பிரச்சினை கண்டு தமிழர்கள் எனும் மாபெரும் இனமாய் தமது உரிமைகளுக்கு போராட வேண்டிய , போராடிக்கொண்டிருக்கிற ஒரு சூழலில் மொத்த தமிழினத்திற்கும் ஒரு அவமானமாய் சட்டக்கல்லூரியில் ஒரு கோர சம்பவம் நடை பெற்றிருக்கிறது…
படித்த அறிவு ஜீவிக்கள் கூட எங்கோ ஒரு மூலையில் சில கிராமங்களில் படிக்காத பாமர மக்களும் , கிராமத்து பெரிசுகளும்தான் சாதியை வளர்க்கின்றனர் என்று குற்றம் சாட்டினர்…….நகரங்களில் [...]
