கலைஞர் செயல்பாடு : ஸ்டாலின் பெருமிதம்..!

கோவை: அண்ணாவின் பெயரில் சிலர் கட்சி நடத்துகின்றனர். ஆனால் அண்ணாவின் கொள்கை, லட்சியங்களை செயல்படுத்தும் ஒரே தலைவர் கருணாநிதி மட்டுமே என்று தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில்,
அண்ணாவின் பெயரில் சிலர் கட்சி நடத்துகின்றனர். அவர்கள் எல்லாம் அறிக்கைதான் விடுகின்றனர். ஆனால் அண்ணா நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதில்லை.
தமிழகத்தில் இன்று யார் யாரோ திடீர் தலைவராகி விடுகின்றனர். அவர்கள் எல்லாம் அடுத்து நாங்கள் தான் முதல்வர் என்கின்றனர்.
கடந்த 1957ம் ஆண்டு 15 இடங்களிலும், 1962ல் 50 இடங்களிலும் [...]

ஈழம் – கலைஞர் தடுமாற்றமா?

இங்கே ஈழத்தின் பால் அக்கறை காட்டும் தமிழுணர்வாளர்களில் மிகப்பலர் , ஈழப்பிரச்சினையில் கலைஞர் தடுமாற்றத்துடன் கருத்துக்களை தெரிவிப்பதாக கருதுகிறார்கள்….ஒரு வகையில் அவரது நிலைப்பாடும் அவ்வாறு கருதுவதாகவே இருந்து வந்திருக்கிறது….

ஆனால் உண்மை நிலை என்ன???

கலைஞரது தமிழுணர்வையும் , அவரது ஈழத்தின் பாலான அக்கறையையும் சந்தேகப்படுவதென்பது மிகப்பெரிய முட்டாள்தனம்..!! ஆகவே , அவ்வாறான வாதங்களை வைப்போர் , கலைஞரின் அரசியல் எதிர்களே என்பது உள்ளங்கை நெல்லிக்கனி , அவர்களுக்கு நாம் பதிலும் சொல்லத் தேவையில்லை.ஆனால் , கலைஞரின் நிலையில் குழப்பங்கொண்டு [...]

போர் நிறுத்தம் தான் உடனடித்தேவை – கலைஞர் வலியுறுத்தல்!

போர் நிறுத்தம் ஏற்பட இலங்கை அரசை வற்புறுத்துமாறு பிரதமருக்கு கருணாநிதி மீண்டும் வலியுறுத்தல்

[ திங்கட்கிழமை, 10 நவம்பர் 2008, 02:37.38 PM GMT +05:30 ]

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட, அந்நாட்டு அரசை வற்புறுத்த வேண்டும் என்று பிரதமரை முதல்வர் கருணாநிதி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.  இது குறித்து அவர் இன்று திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இலங்கையில் போர் நிறுத்தம் இரு சாராரும் கடைப்பிடிக்க வேண்டியது எனக் கூறியிருந்தேன். இந்நிலையில் போர் நிறுத்தத்திற்குத் தயார் என விடுதலைப் புலிகள் [...]

‘இலங்கை’: பிரதமர்-சோனியாவுடன் பாலு மீண்டும் சந்திப்பு

புதன்கிழமை, நவம்பர் 5, 2008

டெல்லி:  இலங்கை தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்குமாறு இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் மத்திய அரசு தீவிரமாக வற்புறுத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியாவிடம் டி.ஆர்.பாலு மீண்டும் நேரில் கோரிக்கை விடுத்தார்.
பீம்ஸ்டெக் எனப்படும் 7 தெற்காசிய பிராந்திய நாட்டு தலைவர்களின் மாநாடு, வரும் 13ம்ந் தேதி டெல்லியில் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள இலங்கை அதிபர் ராஜபக்சே டெல்லி வருகிறார்.
இந் நிலையில், பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய [...]