சட்டசபைத் தேர்தலில் திமுகவின் தோல்வி , திமுகவுக்கானது அல்ல. மக்களுக்கேற்பட்ட தோல்வி. ஆரியவல்லியின் அடக்குமுறைகளைக் கண்டு பொங்கியெழ காலம் மக்களுக்களித்த வாய்ப்பு. ஆட்சி செய்யும் அடிப்படைகளேதுமே தெரியாத அதிமுகவைக் இனிமேலும் ஆட்சிக்கட்டிலில் ஏறவிடாமல் செய்திட அரியதொரு வாய்ப்பு. ஆகவே உடன்பிறப்புக்களே , அமைதி காத்திடுக. சமயம் வரும்போது சீறிப்பாய்ந்திடுக. இந்த மக்களுக்கு நல்வழி காட்ட திமுகவை விட்டால் எந்த ஒரு இயக்கம் இருக்கிறது? நாம் மக்கள் மேல் கோவித்துக்கொள்ளலாமா? மக்கள் அடிக்கடி மறந்துவிடுவார்கள். நாம்தான் ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்!!! கழக இளைஞர்களே களமாடுவோம். மக்கட்பணி செய்வோம்!!!
வாழ்க தமிழகம்…
வளர்க தமிழ்த்திருநாடு….
வெல்க தமிழர்தம் வேட்கை…
தமிழீழமே உலகத்தமிழர்களின் தாளாத கனவு!!
உடன்பிறப்புக்கள்!!
Leave a comment
No comments yet.
Leave a comment