தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இல்லையென்று குறை கூறும் இளங்கோவன் அவர்களின் அறிக்கையை ஆராய்வதை விட அதற்கு அவர் சொன்ன உதாரணங்கள்தான் வேடிக்கையிலும் வேடிக்கை….
http://thatstamil.oneindia.in/news/2008/11/05/tn-no-law-and-order-in-tamil-nadu-says-illangovan.html
மதுரையில் எப்போதோ நடைபெற்ற தினகரன் சம்பவத்தைச் சொல்லி 2008 ல் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்பது யாரை ஏமாற்ற என்பதை இளங்கோவன் அவர்கள் சொன்னால்தான் நமக்குத் தெரியும்!!!!!
கடந்த தேவர் ஜெயந்தியின் போது தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த கிருஷ்ணசாமி தாக்கப்பட்டதற்கும் , சட்டம் ஒழுங்கிற்கும் சம்பந்தம் இருப்பதாக கிருஷ்ணசாமி அவர்கள் கூட குற்றஞ்சாட்டவில்லை…!!!ஆனால் போன வருடம் நடந்த இந்தச் சம்பவத்தினால் 2008 ல் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாம்!!!!
ஜெயலலிதா அம்மையாரின் குற்றச்சாட்டுக்குத்தான் அதிமுகவினரே கல் வீச்சில் ஈடுப்பட்டிருக்கிறார்கள் என்று போலிசார் சொல்கிறார்களே???? விசாரித்து உண்மை தெரிந்தபின் குற்றஞ்சாட்டுங்களேன்….தவிர்த்து அந்த அம்மாவுக்கெல்லாம் வக்காலத்து வாங்கினால் பின்னால் பிரச்சினை …பாத்து நடந்துக்கோங்கோவ்!
///அதற்கடுத்து உசிலம்பட்டி அருகே புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தாக்கப்பட்டுள்ளார். மேலும் ஒரு பத்திரிகை அலுவலகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது..//
உத்தபுரம் போன்ற பிரச்சினைகள் மிகவும் சென்சிடிவ்வானது…உங்கள் அரசியல் சண்டைகளை அறிக்கைகளில் வைத்துக்கொள்ளுங்கள் , மக்கள் வாழ்க்கையில் அல்ல…..!!!! இதுபோன்ற கலவரங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்காவிட்டால் , மத்தியில் ஆட்சி செய்யும் உங்கள் காங்கிரஸ் போலத்தான்!!!!!
ஊரெங்கும் குண்டு வெடிப்புக்கள் ………
உணர்ச்சியில்லாத ஜடமாய் இந்திய நடுவண் அரசு………..!!!!!!
முதலில் அடுத்தவர்களை குற்றஞ்சாட்டுவதற்கு முன் உங்கள் கட்சியில் சட்டமோ , ஒழுங்கோ இருக்கிறதா என்று பாருங்களேன்…அதை முன்னேற்றினாலாவது கட்சி உயிருடன் இன்னுங் கொஞ்ச காலம் இருக்கும் , அடுத்தவர்களைக் குற்றஞ் சாட்டும் முன்…!!!!
////இன்றைக்கு உள்ள சூழ்நிலையில் திமுக அமைச்சரவையில் காங்கிரசுக்கு பங்கே வேண்டாம் என்றார்./////
ச்சீ ச்சீ , இந்தப் பழம் புளிக்கும்!!!!!!!!!!