அது சின்னக்கவுண்டர் என்ற திரைப்படம்னு நெனைக்கிறேன்……! எந்நேரமும் தேவையில்லாத ஆராய்ச்சி பண்ணிக்கொண்டே இருப்பார் திரு.செந்தில் , கவுண்டமணி அதைக்கிண்டலடிப்பார் கவுண்டமணி….
அத்தகைய செந்தில் சாரின் தேவையற்ற ஆராய்ச்சி போலவே இருக்கிறது ஜூவியின் ல்லுல்லாயி ஆராய்ச்சியும் அதையொட்டிய டோண்டூ சாரின் பதிவும்….!!
கிண்டலாகச் சொன்னேன் என்று பெருந்தன்மையுடன் சொன்ன பிறகும் அதற்காக மான நஷ்ட வழக்குப்போடும் ஜெயல்லிதாவைக் கண்டிக்க துப்பில்லாதவர் அவர் என்றே நாம் கருதுகிறோம்…
மேம்பால ஊழல் வழக்கென்று கலைஞரை நள்ளிரவில் கைது செய்தாரே , இன்று அந்த வழக்கில் எந்த மூகாந்திரமும் இல்லை , குற்றமும் நிரூபிக்கப்படவில்லை…!!! அதற்காக ஜெயல்லிதா மன்னிப்புக் கேட்டாரா ? அதைக் கண்டிக்க நினைத்தாரோ டோண்டு சார்…? இல்லை இதே போன்ற ஒரு நையாண்டிப்பதிவையாவது பதிந்தாரா?
டோண்டு சாரை பல காலமாக பதிவுகளின் அறிந்தவன் என்ற முறையில் , நானும் மற்ற நண்பர்களும் அவரை “சோ”வின் பிரச்சார பீரங்கி என்பதனையும் , துக்ளக்கின் வலைப்பதிவு முகம்தான் அவரது இணையப்பக்கம் என்பதில் மாற்றுக்கருத்திருக்க முடியாது..!!!!!
ஆகவே , துக்ளக்கிற்குள்ள வாசகர் வட்டமும் , டோண்டு சாரின் வலைப்பதிவு வாசகர் வட்டமும் சற்றேறக்குறைய ஒரே மாதிரியான கருத்தோட்டம் கொண்டவர்கள் என்பது தான் உண்மை…
தான் எழுதுவதே மக்களின் கருத்தாக இருக்க வேண்டும் , மாற்றுக்கருத்துக் கொண்டவர்களெல்லாம் முட்டாள்கள் என்பதை சோ அவர்கள் என்றுமே தன்னுடைய அடிமனதில் நினைத்துக்கொண்டுதான் இருக்கிறார்…..அதைத்தான் காட்டுகின்றன , சமீபத்திய வட இந்தியப்பத்திரிகைக்களிடம் அளிக்கும் பேட்டி. தனது கருத்தையே தமிழக மக்களின் கருத்தாக திரித்துக் கூறுவதில் ஏற்படும் அற்ப சந்தோசம் அவருக்கு…
அதே போலவே , ஜூவியின் இந்த நையாண்டியை எடுத்து தனது வாசகர்களுக்கு கொடுத்து மகிழ்ந்து போவதில் அற்ப சந்தோஷம் திரு.டோண்டு சாருக்கு..!!!!
ஆனால் , இவ்வாறு கலைஞரை விமர்சிக்கும் பலரும் ஒருதரம் கூட மறந்தும் ஜெஜெவையோ , சோவையோ , ராம் ஐயோ , சுப்ரமன்யம் சுவாமியையோ விமர்சிப்பது கிடையாது…
நாமாவது வெளிப்படையாக நமது நிலையை அறிவித்து விட்டு வாதம் செய்கிறோம்….
ஆனால் , இவர்கள்???????
வளரட்டும் உங்கள் பணி ,
வளரட்டும் கலைஞரின் விளையாட்டு மீதான அக்கறை !!!!